Thursday, 2 June 2011

சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மையுள்ளதா என்பது குறித்து விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சீமானிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்வது பற்றியும் சீமான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருடன் இருக்கும் நாங்கள்தான் போராடி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளோம்.   இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று சீமான் விரும்பினார்.

தற்போது அகதி முகாமில் தங்கியுள்ள அப்பெண்ணின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். விரைவில் சீமான் அப்பெண்ணை மணக்க உள்ளார். போலீஸ் விசாரணையில் விஜயலட்சுமியின் புகாரில் உண்மையில்லை என்பது தெரியவரும்.

சீமானின் புகழை கெடுக்கும் வகையில் செயல்பட்ட விஜயலட்சுமி மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம். சீமான் குற்றமற்றவர் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment