சிறைப்பிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும், படகுடன் விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முதல் காலவரையற்ற, “ஸ்டிரைக்’கில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களும், நேற்று, வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது: மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்லும் விசைப்படகு மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது. இலங்கை கடற்படையினர், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு வரவேண்டும். இவ்வாறு சின்ன அடைக்கலம் கூறினார். ராமேஸ்வரத்திலிருந்து, கடந்த 21ம் தேதி, மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் சிலர், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக, இலங்கை கடற்படையினர், ஐந்து படகுகளுடன், 23 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள், நேற்று, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாகப் போயிருக்கின்றன.
இந்திய மத்திய அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1. தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீனவர்களின் கடலில் மீன்பிடிக்கும் உரிமை நாட்டு எல்லைகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.
2. இந்திய கடற்படை மூலமாக, பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
3. கச்சத் தீவை இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசில் வற்புறுத்தி, தமிழர் நலன்களை பாதுகாக்கும்படி இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment