Saturday, 11 June 2011

கருணாநிதியின் முடிவால் அதிர்ச்சி: கழுதை கெட்டால் குட்டி சுவர் கருணாநிதி கெட்டால் பிராமன பழிப்பு?

தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் என்ற அறிவிப்பு வெளியானதும், அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பு அரசியல் அரங்கில் ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர் நெருக்கடிகளால், துவண்டு போயுள்ள தி.மு.க., மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இந்த கூட்ட முடிவில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என தி.மு.க., தலைமை அறிவித்திருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.தேர்தல் முடிந்ததும், ராஜ்யசபா எம்.பி.,யும், கருணாநிதி மகளுமான கனிமொழி கைது செய்யப்பட்டார். குறைந்தபட்சம் அவர் கைதாவதையாவது, மத்திய அரசு தடுத்திருக்கலாம் என, தி.மு.க., தலைவர் மட்டுமின்றி, தொண்டர்களும் நினைத்தனர்.  ராஜா, கனிமொழி ஆகியோரை தொடர்ந்து, தற்போது தயாநிதிமாறனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நெருக்கடி, தி.மு.க.,வை நிலைகுலையச் செய்துள்ளது.மகள் கனிமொழி சிறையில் வாடுவது, தி.மு.க., தலைவர் கருணாநிதியை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது. 

கூட்டம் முடிந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் பேசும் போது, "காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடும்படி, மத்திய அரசை நாங்கள் நிர்பந்திக்கவில்லை' என கூறினார்.தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்ட போது, கருணாநிதி கடுமையாக கோபப்பட்டார். 

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது குறித்தெல்லாம் கேட்காமல், கனிமொழி வழக்கை மட்டும் பேசுகிறீர்களே' என எரிந்து விழுந்தார். "காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதே' என கேட்ட போது, "தி.மு.க., தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்' என்றார்."மத்திய அரசிலிருந்து விலகினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சந்திப்பது சிரமமாக இருக்கும் என்பதாலே, மத்திய அரசிலிருந்து விலகவில்லை' என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment