Sunday, 26 June 2011

அன்புமணியின் ராஜ்யசபா MP கனவு ,மத்திய மந்திரி கனவு கனவாவே போய்விட்டது. பாவம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

நங்கள் அரசியலுக்கு வர மாட்டோம் என்றுதானே ஜாதி கட்சி ஆரம்பிக்கும் பொது மருத்துவர் சொன்னார் அதனால் மக்களே உங்களை அரசியலை விட்டு துரத்துகிறார்கள். . சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது. தலை கணத்துக்கு சரியான பாடம்.எப்படியாவது யாருடனாவது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்ற குறுக்கு புத்தியை விட்டு விட்டு சொந்த தொழில் எதாவது (மரம் வெட்டுவது) இருந்தால் அப்பாவும் பிள்ளையும் பார்ப்பது நல்லது .தேர்தலில் நிற்பது மரம் வெட்டுவது இரண்டுமே நாட்டுக்கு கேடு. எதாவது ஒரு கேடு போதும் எங்களுக்கு. மொத்தத்தில் உங்கள் கட்சி நாட்டுக்கு கேடு .
 
சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது . இந்த மாதிரி விளக்கெண்ணை விளக்கங்கள் தருவதை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பாருங்கள் இல்லையென்றால் பசுமைதாயகம் சார்பில் நீங்கள் மரம் நடுங்கள் , உங்கள் அப்பாவை ஏதாவது போராட்டம் நடத்தச் சொல்லி மரத்தை வெட்டச் சொல்லுங்கள் ,பொழுது போக வேண்டாமா?
 
அட்டை ரத்தம் கிடைக்குமிடத்தில் ஒட்டிக் கொண்டு எப்படி உறிஞ்சி வாழக்கூடியதோ அதுபோல வெல்லும் வாய்ப்புள்ள கூட்டணியில் ரகசியமாக பேரம் நடத்தி கெஞ்சிக் கூத்தாடி இணைத்துக் கொண்டு, ஜாதியையே மையமாக வைத்து அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் / அமைத்துக் கொள்ளும் நீங்கள் இதுவரை மக்களால் ஆதரிக்கப்பட்டதே வியப்புக் குரியது! மக்களால் அருவருப்புடன் புறக்கணிக்கப் படவேண்டிய கட்சிகளில் நீங்கள் முதன்மையானவர்கள்! இந்தக் காரணத்தை முன்னிட்டே, உங்களுக்கு ஒரு வாக்காளர் ஆதரவு தெரிவித்தாலும் அவர் இந்தியக் குடிமகனாய் இருக்க லாயக்கில்லாதவர். ஏனெனில் ஜாதி மத வேறுபாடுகளை மையமாக வைத்து செயல்படும் ஒரு இயக்கம் அங்கீகரிக்கப்படுவதே அரசியல் சட்டத்திற்கு முரணானது.
 
இரண்டு கால்களும் இல்லாதவன் வேறு ஒருவன் முதுகில் தொத்தி கொண்டு தான் போக வேண்டும். பா மா கா வை பொறுத்தவரை கால்களும் இல்லை கைகளும் இல்லை. 
 

No comments:

Post a Comment