சமசீர் கல்வி கோட்பாடு என்பது நாட்டுக்கு தேவையான ஒன்று..உங்களுக்கு பிடிக்காத ஒரு சில செய்திகள் இருந்தால் அதை களைந்து விட்டு அழகாக நீங்களே நடை முறை படுத்தி இருக்கலாம்..இப்படி நீதி மன்றம்..மேல் முறையீடு என்று சென்று கவுரவ பிரச்சனையாக மாற்றி இருக்க கூடாது. அரசியல் விளையாட்டிற்கு மாணவர்களின் கல்வியை பகடை காயாக்கிவிட்டீர்கள்... போதும் உங்கள் விளையாட்டு. சமசீர் கல்வி வேண்டும் தமிழகத்திற்கு, அதுவும் தரமானதாக வேண்டும்.. தமிழக அரசிற்கு இன்னும் ஒரு ஆண்டுகாலம் இருக்கிறது அதற்குள் தரமான சமசீர் கல்வியை அமுல்படுத்துமா இந்த அரசு?? அடுத்த ஆண்டு கல்விமுறையை தரமான சமசீர் கல்வியாக மாற்றி நம் தலைமுறையை வளப்படுத்த சிரம் தாழ்ந்து வேண்டும்
எந்த ஆதாரமும் இல்லாமல், சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் நோக்கில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கையால், 1 கோடியே, 20 லட்சம் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி எப்போது அமல்படுத்தப்படும் என, திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் நோக்கில் தான் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. முந்தைய அரசு செய்தது என்பதற்காக, மாணவர்களின் நலன்களை புறக்கணித்து அரசியல் ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என வாதாடினர். இருதரப்பு வாதங்களும் கடந்த வாரம் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ,"பெஞ்ச்' கடந்த 4ம் தேதி தள்ளிவைத்தது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் மீது, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. , பள்ளி மாணவ , மாணவியருக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையை இன்றோ, நாளையோ துவங்கும் வகையில், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் மீது, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. , பள்ளி மாணவ , மாணவியருக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையை இன்றோ, நாளையோ துவங்கும் வகையில், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமநோக்கு பார்வைகள் இருந்தால் தான் மக்கள் மத்தியில் பாகுபாடுகளும் பொறாமைகளும் அற்று இருக்கும். இந்த சாதாரண வழிமுறை நம் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு இத்தனை காலம் ஆகி உள்ளது. இனி இது தொடரும்.. இந்த பாரம்பரியம் வெல்லும். மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு ! இனியாவது குழந்தைகள் நிம்மதியாக பள்ளிக்குப் போய் பாடங்களை படிக்கட்டும்.பெற்றோர், பிள்ளைகள் , ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் மன அழுத்தம் குறைந்தது. ஏட்டிக்கு போட்டி எப்போதும் வெல்லாது ! ஒரு ஜனநாயக நாட்டின் மிக உயரிய நீதிமன்றம் மிகச் சிறப்பான தீர்ப்பை பெருவாரியான மக்கள் நலன் கருதி வெளியிட்டுள்ளதற்கு.
ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.
ReplyDeleteசபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் பட்டிமன்றம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.
நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு முன் நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.
‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.
1. http://www.kelvi.tk
2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வாரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார், முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும். கல்வித்துறையில் பணிபுரியும் முட்டாள்களே மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். கருத்துக்களைத் திரிக்காதீர்கள். திரித்தால், என்போன்றவர்களிடம் கேவலப்பபட்டுப் போவீர்கள். செய்யுமுன் சிந்தித்து செயல்படுங்கள். கால் செருப்பு தூக்கப்போனால் பிறகு செருப்படி வாங்கவேண்டியதுதான்.
———————————————————
அறிவை வளர்த்துக் கொள். இது ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை. உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அனுப்புங்கள். நாங்கள் அவர்களின் அறிவை வளர்த்து விடுகிறோம். இது திருட்டுக் கயவாளி ஆசிரிய கொள்ளைக்கூட்டங்களின் பொய்யுரை. அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவன் பல ஆண்டுகள் பள்ளி சென்று, புத்தகங்கள் பல படித்து, பாடங்கள் பல பயின்று, தேர்வுகள் பல எழுதி, பட்டங்கள் பல பெறவேண்டுமா? தேவையில்லை. உன்னிடம் சிந்திக்கும் திறனிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வழியில் சிந்தித்துப் பார். வளரும் உன் அறிவு.
கேள்வி: ஒன்றைப்பற்றி என் அறிவை வளர்த்துக் கொள்வது எப்படி?
பதில்: ஒன்றைப்பற்றி அறியப்பட வேண்டியவைகளை அறியும்போது அதைப்பற்றிய உன் அறிவு வளரும்.
ஒன்றைப்பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. அதன் பாகங்கள் எவை?
2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?
3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?
4. அதைப் பாதிப்பவைகள் எவை?
5. அதன் உருக்கள் எவை?
6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?
7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?
.
.
.
விதிப்படி பொருளா? பொருட்படி விதியா? எதுவும் விதிப்படிதான் என்கிறது அறிவியல். விதிப்படிதான் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. விதிப்படிதான் ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் உருவாக்கப்படுகின்றன. விதிப்படிதான் ரயில் என்ஜினும், உன் இதயமும் இயங்குகிறது. நீ உண்ணுவது செரிப்பதும் விதிப்படிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரியனைச் சுற்றுவதும் விதிப்படிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்படிதான் இயங்குகிறது. விதிப்படிதான் எதுவும் தோன்றி மறைகிறது. விதிப்படிதான் உன் பிறப்பும், இறப்பும். விதிப்படிதான் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. விதியறியாதவன் திட்டமிட்டு ஏவுகணைகளையும், விமானங்களையும், ராக்கெட்டுகளையும், ரயில் என்ஜின்களையும், கணிணிகளையும் உருவாக்குவதில்லை.
பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.