Thursday, 5 May 2011

கைதுக்கும் நான் தயார்-கனிமொழி

என்னை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று திமுக ராஜ்யசபா எம்.பியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான கனிமொழி கூறியுள்ளார்.

கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை டெல்லியில், சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பதைபதைப்பு காணப்படுகிறது.

திமுகவின் முக்கியத் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். டி.ஆர்.பாலு, மு.க.அழகிரி ஆகியோரது தலைமையில் பல்வேறு வகையான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கனிமொழியும் தனது கணவர் அரவிந்தன் மற்றும் மகனுடன் டெல்லி வந்துள்ளார்.

ந்த வழக்கு குறித்து ஆரம்பத்திலிருந்தே நான் பலமுறை விளக்கி வருகிறேன். ஊகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. இந்த வழக்கில் கோர்ட் என்ன முடிவெடுக்கிறது என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே கோர்ட் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது.

என்னைக் கைது செய்ய சிபிஐ விரும்பினால், பார்க்கலாம். சட்டப்பூர்வமாக எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எதையும் சட்ட ரீதியாகவே நான் சந்திப்பேன்.

No comments:

Post a Comment